தொலைந்த கனவுகள்! கவிதை

தொலைந்த கனவுகள்!

நிஜத்தின் நிழலாய்
எப்பொழுதும்
உனைச் சுற்றினேன்
அதில்
நிலவாகவும்
வருடும் இளம் காற்றாகவும்
ஏன்?
பரவி கிடக்கும்
நதியாகவும், கடலாகவும்
மாறியதும் உனக்காக தான்
மலர்ந்தேன் சிறிதாக
உனைக் கண்ட நாளன்றே
முழுமையாக முக்குளிர்த்தேன்  - உன்
காதலால்...
கண்னால் உருவான காதல்
இதயத்துக்குள் புகுந்து
அங்குள்ள
நான்கறைகளிலும் - உன்
நாமத்தை மட்டும்
பச்சைக்குத்தி விட்டேனன்று
ஆனால்...
காதல் மட்டும் என் வசமிருக்க
காற்றலையாய் போனதேன்
உன் உருவம் மட்டும்
பறக்கின்றன உடல் மட்டும்...
பிறக்கின்றன எம்  காதல் என்றும் -  இங்கே
கரைகின்றன காலம் மட்டும்
என்றும் உயிர் வாழ்வது  -  எம்
அன்பு மட்டும்
நிலவோடு பேசிக்கொண்டு
நித்திரையில் உன் நினைவோடு
நீண்ட நேரமாய் துயில் கொள்கிறேன்
உனக்கு புரியா விட்டாலும்
என் தலையணை
அதனை அறிந்திருக்கும்
சட்டென்று நீ
எனை பிரியும் செய்தி அறிந்து
வீரிட்டு அழ முடியாமல்
அகமதில் நான் அழுகின்றேன்
அதை நீ அறிவாயா
உன் பாசமெனும் பள்ளி அறையில்
பல நாட்கள் படிக்க நினைத்தேன்
ஆனால் சில நாட்களுக்குள் நீ
பிரிந்து போகிறாயே...
என்ன கொடுமை பார்

ஊமை விழிகளில்
உறக்கமேது
இப்பொழுதே என்
கனவு தொலைகின்றது

- ரேணுகாதாஸ்

Comments